Dienstag, 1. Mai 2012

இந்துசமயப் பரீட்சை - 2013




வாணிவிழா

  12.10.2013 சனிக்கிழமை
 வாணிபூஜையும் வழிபாட்டு நிகழ்ச்சிகளும்; பி. 4    
 மணிக்கு  ஆரம்பமாகும்.
அன்பர்கள் அனைவரும் முன்கூட்டியே
வருகை தந்து
விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைக்குமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்




இப்பகுதி  தயாரிக்கப்படுகின்றது. இன்னும்                                 முழுமையடையவில்லை


கடவுளைத் தினமும் வணங்குவோம்!



இந்துசமயப்பரீட்சைக்குரிய விபரம்

இந்துசமய வினாத்தாளிலிருந்து ---------------

7 வயதுக்குட்பட்டோர்

1 தொடக்கம் 10 வரையிலுமான வினாக்களுக்கு விடை எழுதவேண்டும்.
தேவாரமும் புராணமும் பாடவேண்டும்.

10 வயதுக்குட்பட்டோர்

 1 தொடக்கம் 15 வரையிலுமான வினாக்களுக்கு விடை எழுதவேண்டும்.
தேவாரம்> திருவாசகம்> புராணம் ஆகியன பாடவேண்டும்.

14 வயதுக்குட்பட்டோர்
1 தொடக்கம் 20 வரையிலுமான வினாக்களுக்கு விடை எழுதவேண்டும்.
தேவாரம்> திருவிசைப்பாபுராணம் ஆகியன பாடவேண்டும்.


14 வயதுக்கு மேற்பட்டோர்

1 தொடக்கம் 20 வரையிலுமான வினாக்களுக்கு விடை எழுதவேண்டும்.
தேவாரம்> திருப்பல்லாண்டு> புராணம் ஆகியன பாடவேண்டும்.



இந்துசமயப் பரீட்சை - 2013

1.   பொருத்தமான சொல்லை வைத்து இடைவெளியை நிரப்புக.

     தனதடி; மிகுகொடை; வலமுறை; கொளமிகு; வர

தேவாரம்
பிடியத னுருவுமை (1)---------------------------------- கரியது
 (2)-----------------------  வழிபடு மவரிடர்
கடிகண பதி (3)------------------------ அருளினன் (4)-------------------
வடிவினர் பயில்வலி (5)-------------------------- யிறையே. 
                                     -சம்பந்தர்

2.   பொருத்தமான சொல்லை வைத்து இடைவெளியை நிரப்புக.


பொருட்கள்; உள்ள; நலமுடன்; இறைவன்; அவரை வணங்கி

 இறைவன் எங்களை நலமுடன் வாழவைப்பார்.
 நாம் வாழும் உலகைப் படைத்தவர் (1) --------------------------------. இந்த உலகில்       (2) ------------------------ உயிரினங்கள் இயற்கைப் (3) ------------------------அனைத்தையும் படைத்தவர் அவரே. அவர் எமக்கு அற்தபுதமான  உடலைத்  தந்துள்ளார். (4) ----------------------------------- -------------------------------- அருள் பெறுவோம். அவர் படைத்த உயிர்களிடத்து நாம் அன்பு  செலுத்துவோம். அவர் எங்களை (5) -------------------------- வாழ வைப்பார்.

3.                       பொருத்தமான சொல்லை வைத்து இடைவெளியை நிரப்புக.

தன்னை; நினைத்தாலே; சகல; கருணைக்கடல்; கடவுள்
சகல ஐசுவரியங்களும் தரும் விநாயகர் வழிபாடு.
மனதில் (1) ----------------------------------- ஓடி வந்து அருள்புரியும் முதன்மைக் (2) ------------------------------------ விநாயகர். கலியுகத்தின் (3)---------------------------- பிள்ளையார். (4) ------------------------------------------------------ வணங்குபவர்களுக்கு (5) ----------------------------    நலன்களையும் அள்ளி வழங்குபவர் விநாயகர். 




4.      பொருத்தமான சொல்லை வைத்து இடைவெளியை நிரப்புக.


கரிமுகத்து; தெளிதேனும்; நான்; மூன்றும்; எனக்கு

பாலும்
(1) ---------------------------------   பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு (2) ---------------------------------- தருவேன் -கோலம்செய்  துங்கக் (3)  ---------------------------------துாமணியே  நீ (4) --------------------------
சங்கத் தமிழ் (5) --------------------------------  தா

5.      தொடர்புபடுத்துக:
1.)  நல்லுார்

a)  தொண்டமானாறு
2.)  திருக்கேதீசுவரம்
b) திருகோணமலை
3.)  திருக்கோணேசுவரம்
 c) மாணிக்ககங்கை
4.)  செல்வச்சந்நிதி
d). யாழ்ப்பாணம்
5.)  கதிர்காமம்
e). மன்னார்

6.      பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக.

1)   உலகத்துக்குக் கருத்தா யார்?
(அ) சிவபெருமான்             (ஆ) திருநாவுக்கரசு நாயனார்
(இ) முருகப்பெருமான்

2)   என்றும் உள்ளவர்எங்கும் நிறைந்தவர்எல்லாம் அறிபவர்; எல்லாம் செய்பவர்; என்றும் மகிழ்ச்சியுடையவர்; தம்வயமுடையவர். இவர் யார்?
     (அ) கணபதி          (ஆ) சிவபெருமான்    (இ) சரஸ்வதி

3)   படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தும்,
     அ) முத்தொழில்கள்   ஆ) ஐந்தொழில்கள் இ) செய்தொழில்கள்

4)   திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்> திருநாவுக்கரசு நாயனார்,
     சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்தவை,
     (அ) திருக்குறள்  (ஆ) தேவாரங்கள்          (இ) திருவாசகம்

5)   திருவாசகம் அருளிச் செய்தவர் யார்?
     (அ) திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்> (ஆ) சுந்தரமூர்த்தி நாயனார்,           (இ) மாணிக்கவாசக சுவாமிகள்.

7.      தொடர்புபடுத்துக:

1)      சோழநாட்டிலே சீர்காழியிற் பிறந்தார்
 
a). சிவபெருமான்
2)      திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரிலே பிறந்தார்
b). சுந்தரர்
3)      பாண்டிநாட்டில் திருவாதவூரிலே பிறந்தார்
  c). திருஞானசம்பந்தர்
4)      திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரிலே பிறந்தார்
d).திருநாவுக்கரசர்
5)      குதிரை வணிகர் தலைவனாக வந்தவர்

e).மாணிக்கவாசகர்


8.   பொருத்தமான விடையின் கீழ் கோடிடுக.
1)      பிரமாவினுடைய சத்தி
     (அ) சரஸ்வதி    (ஆ) இலக்குமி          (இ) உமை   (ஈ) மகேஸ்வரி
     (உ) மனோன்மணி.
2)   விட்டுணுவினுடைய சத்தி
     (அ) சரஸ்வதி    (ஆ) இலக்குமி          (இ) உமை   (ஈ) மகேஸ்வரி
     (உ) மனோன்மணி.
3)   உருத்திரனுடைய சத்தி
     (அ) சரஸ்வதி    (ஆ) இலக்குமி          (இ) உமை   (ஈ) மகேஸ்வரி
     (உ) மனோன்மணி.

4)   மகேசுரனுடைய சத்தி

(அ) சரஸ்வதி    (ஆ) இலக்குமி          (இ) உமை   (ஈ) மகேஸ்வரி
(உ) மனோன்மணி.
5)      சதாசிவனுடைய சத்தி
     (அ) சரஸ்வதி    (ஆ) இலக்குமி          (இ) உமை   (ஈ) மகேஸ்வரி          (உ) மனோன்மணி.                                                                                                                   (

9. சரியாயின்
எனவும் பிழையாயின் X எனவும் குறிக்க.

1
புகழனார் மாதினியார் இருவரின் பிள்ளைகள் திலகவதியாரும் மருணீக்கியாரும் ஆவர்.
2
திலகவதியார் மருணீக்கியாரைப் பேணி வளர்க்கும் பெரும் பணியில் ஈடுபடவில்லை.
3
மருணீக்கியார் பள்ளியில் எல்லாக் கலைகளையும் திறம்பெறக் கற்றுத் தேர்ந்தார்.
4
 மருணீக்கியார் சமணமதத்தில் சேரவில்லை
5
சமணர்  மருணீக்கியாருக்குத் `தருமசேனர்` என்னும் சிறப்புப் பெயர் அளித்துப் பாராட்டி னர். 


10  சரியாயின்எனவும் பிழையாயின் X எனவும் குறிக்க.

1
நவராத்திரி சக்தியைப் போற்றிக் கொண்டாடும் விழாவாகும்.
2
கல்வியை வேண்டித் திருமகளை வழிபடுவர்.
3
கல்வியை வேண்டிச் சரஸ்வதியை வழிபடுவர்.
4
பாடசாலைகளில் நவராத்திரிவிழா நடைபெறுவதில்லை.
5
அறுபத்துநான்கு கலைகளையும் அருள்பவள் கலைமகள்.                                                                                                                                                                           பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக.
1)      முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து வணங்குவது,
                (அ) சிவனை (ஆ) பார்வதியை (இ) கந்தனை (ஈ) கணபதியை
2)      நவராத்திரி விரதம்  எத்தெய்வத்துக்குரியது?       
     (அ) முருகனுக்கு (ஆ) பராசக்திக்கு (இ) விநாயகருக்கு
3)   புரட்டாதி மாதத்தில் ஒன்பது நாளும் பார்வதி தேவியாரைக் கும்பத்திலே பூசை செய்து அனுட்டிக்கும் விரதம்,
     (அ) கந்தசஸ்டி, (ஆ) சிவராத்திரி (இ) நவராத்திரி
4)   விநாயக சதுர்த்தி விரதம் எக்கடவுளுக்குரியது?
     (அ) முருகனுக்கு (ஆ) துர்க்கைக்கு (இ) விநாயகருக்கு
5)   கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என்பன,
     (அ) முருகனுக்கு (ஆ) வேலனுக்கு (இ) சுப்பிரமணியனுக்கு
(ஈ) எல்லாம் சரி

12.  தொடர்புபடுத்துக:
1.)  செல்வம்

a.    சரஸ்வதி
2.)  விஜயதசமி
b.    திருமகள்
3.)  நவராத்திரி
c.    மானம்பூத்திருவிழா
4.)  தாமரைப்பூ
d.    வீரம்
5.)  துர்க்கை
e.    ஒன்பதுநாட்கள்

13.  சரியான விடையின் கீழ்க் கீறிடுக.
1)      ஆளுடைய பிள்ளையார்  என்பது,யாரை?
                (மாணிக்கவாசகர்,               ஞானசம்பந்தர்)
2)      ஞானசம்பந்தரின் தந்தையார் பெயர்
                (சிவபாதவிருதயர், பகவதியார்).
3)      ஞானசம்பந்தரின் தாயார் பெயர்
                (சிவபாதவிருதயர், பகவதியார்).
4)      காலையில் சிவபாதவிருதயர் குளிப்பதற்குக் (குளத்திற்குச், கிணற்றுக்குச்) சென்றார்.
5)      கரையில் இருந்த ஆளுடையபிள்ளையார் தந்தையைக் காணாமல்  (அம்மே அப்பா, அப்பா அப்பா) என அழைத்து அழுதார்.




14.  சரியாயின்  எனவும் பிழையாயின் X எனவும் குறிக்க.
1
பிள்ளையின் அழுகுரல் கேட்ட நிலையில் தோணிபுரத்து இறைவர் இறைவியாருடன்  குளக்கரைக்கு எழுந்தருளினார்.

2
அம்மையார்  தன் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்து  அழுகின்ற குழந்தைக்கு ஊட்ட அழுகை நிற்கவில்லை.

3
சிவபாதவிருதயர், தம்மைந்தர் கடைவாய் வழியாகப் பால் வழிந் திருப்பதைக் கண்டார்,

4
சம்பந்தர் அருளிய தேவாரங்கள் 1 ஆம் 2ஆம் 3ஆம் திருமுறைகளுள் அடங்குகின்றன.

5
சம்பந்தர் `தோடுடைய செவியன்` என்ற தேவாரம் பாடினார்.




15.  சரியான விடையின் கீழ்க் கீறிடுக.
1)   மருணீக்கியார்  என்பது யாரை?
     (நாவுக்கரசர்,     ஞானசம்பந்தர்)
2)   மருணீக்கியாரின் தந்தை தாய் பெயர்
     (புகழனார், மாதினியார் / சிவபாதவிருதயர், பகவதியார்).
3)   திருநாவுக்கரசர் --------------------------------- (வைர நகைகள்,     சிவ சின்னங்கள்) அணிந்து உழவாரப்படை ஏந்தி, இறைபணி செய்ய முற்பட்டார்.
4)      மருணீக்கியாரை வருத்திய நோய்,.
(சூலை நோய்,   புற்றுநோய்)
5)   சூலை நோயினால் சோர்வுற்ற தருமசேனருக்கு யாரின் நினைவு வந்தது
(தமக்கையாரின், தம்பியாரின்)

16.  சரியாயின்  எனவும் பிழையாயின் X எனவும் குறிக்க.
1
திருவாதவூரரின் தந்தையார் பெயர் சம்புபாதாசாரியர். தாயார் பெயர் சிவஞானவதி.

2
திருவாதவூரரை அரிமர்த்தன பாண்டியன் தனது முதன் மந்திரியாக அமர்த்திக் கொண்டான்

3
திருவாதவூரர் பாண்டியனை அழைத்து, அவனுக்குத்  ``தென்னவன் பிரமராயன்`` என்னும் பட்டம் சூட்டினார்.

4
 திருவாதவூரர் குதிரை வாங்கப் பெரும் பொருளுடன் மதுரையை விட்டுப் புறப்பட்டார்.

5
குருநாதர்  திருவாதவூரருக்குத் திருக்குறளை உபதேசம் செய்தருளினார்.


17. சரியான விடையின் கீழ்க் கீறிடுக.

1)    திருவாதவூரர் என்பது யாரை?
     (நாவுக்கரசர்,     மாணிக்கவாசகர்)
2)   மாணிக்கவாசகரின் தந்தை தாய் பெயர்
     (சம்புபாதாசிரியர்,  சிவஞானவதியார்: சிவபாதவிருதயர்,     பகவதியார்).
3)      மாணிக்கவாசகர் அரசன் குதிரை வாங்குவதற்குத் தம்மிடம் அளித்த பொருள்கள் அனைத்தையும் ---------------------------------------------------- செலவிட்டார். .
 (குடும்ப செலவுகளுக்கே,  சிவப்பணிகளுக்கே)
4)      வணிகத் தலைவனாக வந்த சிவபிரான் யார் முன்னிலையில் குதிரைகள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினார்?.
( பாண்டியன், சோழன்)
5)   அன்று இரவு நடுநிசியில் ------------------------------------------------------------------ (குதிரைகளெல்லாம் நரிகளாக மாறின,     நரிகளெல்லாம் குதிரைகளாக மாறின).

18. பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக.

1)      சைவசமயத்தவர்  சரீரத்திலே தரிக்கும் சிவசின்னங்கள் யாது?
விபூதி, உத்திராட்சம் என்னும் இரண்டுமாம்.
2)      சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய இந்நால்வரும்          எவ்வாறு பெயர் பெறுவர்?
     (அ) சைவ சமய குரவர் (ஆ) ஆழ்வார் (இ) மதகுருமார்
3)   சைவசமயத்தவர் உச்சரிக்கும் சிவமூலமந்திரம் யாது?
(அ) திருவைந்தெழுத்து               (ஆ) கோயில்  (இ) விளக்கு
4)      அட்டாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கைகள்  இரண்டு, செவிகள்  இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும்   எட்டு அவயங்களும் நிலத்திலே பொருந்தும்படி                 வணங்குதல்.
5)      பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?
     தலை, கைகள் இரண்டு, முழந்தாள்கள் இரண்டு என்னும் ஐந்து    அவயங்களும்                 நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.





19.  தொடர்புபடுத்துக:

1.)  திருமுறைகளைத் தொகுத்தவர்

a.       பட்டினத்தார்
2.)  திருமுறைகளைத் தொகுப்பித்தவர்
b.      அபிராமிபட்டர்
3.)  திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடியவர்
c.       நம்பியாண்டார் நம்பி
4.)  கோயில் நான்மணிமாலை
d.  இராசராசசோழன்
5.)  அபிராமி அந்தாதி
e.      ஆண்டாள்



20.  சரியான விடையின் கீழ்க் கோடிடுக.

1)   நயினாதீவில் குடிகொண்டிருக்கும் இறைவியின் பெயர்
அ) முருகன்    ஆ) சிவன் இ) நாகபூசணி

2)   „நம்பி பொறு“ என்று தடுத்து, படைத்த அமுது முழுவதையும் உண்டவர்
அ) பிரமா  ஆ) இந்திரன்    இ) பிள்ளையார்

3)   சேக்கிழார் சுவாமிகள் இயற்றிய பெரியபுராணம்
அ) முதலாந்திருமுறை          ஆ) ஏழாந்திருமுறை                இ) பன்னிரண்டாந்திருமுறை

4)   திருமுறைகள்
அ) ஐந்து  ஆ) பத்து  இ) பன்னிரண்டு

5)   மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள்
அ) பெரியபுராணம்    ஆ) திருவாசகம் இ) தேவாரம்






பஞ்சபுராணம்
தேவாரம்சம்பந்தர்

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமசிவாயவே.

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே.

தேவாரம்நாவுக்கரசர்

கூற்றாயின வாறு விலக்க கிலீர்
                கொடுமை பல செய்தன நான் அறியேன்
ஏற்றா யடிக்கே இரவும் பகலும்
                பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம் படியே
                குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில 
                வீரட்டானத்து உறை அம்மானே.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
            நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
               இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான    
சங்கரன்நற்  சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
            கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.




தேவாரம்சுந்தரர்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
                திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
                இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
                விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
                ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத் துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே.

திருவாசகம் – மாணிக்கவாசகர்

முத்திநெறி அறியாத  மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச்  சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே
    பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
    திருப்பெருந் துறையுறை சிவனே
யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
    ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
    வருகஎன் றருள்புரி யாயே. 


              



திருவிசைப்பாதிருமாளிகைத்தேவர்

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
    சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
    அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
    தொண்டனேன் விளம்புமா விளம்பே.


திருப்பல்லாண்டுசேந்தனார்

சீரும் திருவும் பொலியச் சிவலோக
                நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்ற
                தார் பெறுவார் உலகில்
ஊரும் உலகும் கழற உளறி
                உமைமண வாளனுக்(கு)ஆம்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
                பல்லாண்டு கூறுதுமே.                                 


பெரியபுராணம்சேக்கிழார்

கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி. 

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.






விடைகள் -2013                

1.       பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண  பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி  வலமுறை யிறையே.

2.       இறைவன் எங்களை நலமுடன் வாழவைப்பார்.
நாம் வாழும் உலகைப் படைத்தவர் இறைவன். இந்த உலகில் உள்ள உயிரினங்கள் இயற்கைப் பொருட்கள் அனைத்தையும் படைத்தவர் அவரே. அவர் எமக்கு அற்தபுதமான உடலைத் தந்துள்ளார். அவரை  வணங்கி அருள்      பெறுவோம். அவர் படைத்த உயிர்களிடத்து நாம் அன்பு செலுத்துவோம்.    அவர் எங்களை நலமுடன்  வாழ வைப்பார்.

3.       சகல ஐசுவரியங்களும் தரும் விநாயகர் வழிபாடு.                                                                      
1.)  நினைத்தாலே  (2) கடவுள் (3)  கருணைக்கடல் (4) தன்னை 
 (5) சகல
4.       (1) தெளிதேனும் (2) நான்               (3) கரிமுகத்து (4) எனக்கு (5) மூன்றும்

5.       தொடர்புபடுத்துக:

நல்லுார்

  யாழ்ப்பாணம்
திருக்கேதீசுவரம்
 மன்னார்
திருக்கோணேசுவரம்
 திருகோணமலை
செல்வச்சந்நிதி
 தொண்டமானாறு
கதிர்காமம்
மாணிக்ககங்கை


6.       பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக.
1). () சிவபெருமான்        2). () சிவபெருமான்        3). ) ஐந்தொழில்கள் 4). () தேவாரங்கள்                            5). () மாணிக்கவாசக சுவாமிகள்.




7.       தொடர்புபடுத்துக:
1). c). திருஞானசம்பந்தர் 2). d).திருநாவுக்கரசர்  3). e).மாணிக்கவாசகர் 4). b). சுந்தரர்  5). a). சிவபெருமான்

8.       பொருத்தமான விடையின் கிழ் கோடிடுக.
(1)  பிரமாவினுடைய சத்தி சரஸ்வதி; (2)  விட்டுணுவினுடைய சத்தி  இலக்குமி; (3) உருத்திரனுடைய சத்தி உமை; (4)  மகேசுரனுடைய சத்தி மகேஸ்வரி;  (5) சதாசவினுடைய சத்தி மனோன்மணி.

9.       சரியாயின்  எனவும் பிழையாயின் X எனவம் குறிக்க.
1.) (சரி)          2.) (பிழை) X    3.) (சரி)        4.) (பிழை) X    5.) (சரி)   

10.   சரியாயின்  எனவும் பிழையாயின் X எனவம் குறிக்க
1.) (சரி)          2.) (பிழை) X  3.) (சரி)          4.) (பிழை) X  5.) (சரி)   

11.   பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக.
               1). () கணபதியை 2). () பராசக்திக்கு           3).  () நவராத்திரி
               4). () விநாயகருக்கு 5). () மேற்கூறிய மூன்றும்

12.   தொடர்புபடுத்துக:
1). b திருமகள்   2.) c மானம்பூத்திருவிழா  3.) e ஒன்பதுநாட்கள்
4).  a சரஸ்வதி 5). d வீரம் 

13.   சரியான விடையின் கீழ்க் கீறிடுக.
1).ஞானசம்பந்தர் 2). சிவபாதவிருதயர்  3). பகவதியார்  4). குளத்திற்குச்            5). அம்மே அப்பா

14.   சரியாயின்  எனவும் பிழையாயின் X எனவும் குறிக்க.
1.) (சரி)          2.) (பிழை) X  3.) (சரி)          4.) (சரி)   5.) (சரி)   

15.   சரியான விடையின் கீழ்க் கீறிடுக.
               1). நாவுக்கரசர் 2). புகழனார் மாதினியார் 3). சிவசின்னங்கள் 4). சூலைநோய்   5). தமக்கையாரின்



16.   சரியாயின்  எனவும் பிழையாயின் X எனவும் குறிக்க.
1.) (சரி)  2.) (சரி)    3.) (பிழை) X 4.) (சரி)   5.) (பிழை) X
          
17.   சரியான விடையின் கீழ்க் கீறிடுக.
1).  மாணிக்கவாசகர் 2). சம்புபாதாசிரியர், சிவஞானவதியார்   
3). சிவப்பணிகளுக்கே  4). பாண்டியன் 5). குதிரைகளெல்லாம்  நரிகளாக மாறின.
18.   விடை எழுதுக.
1). விபூதி, உத்திராட்சம் என்னும் இரண்டுமாம். 2). () சைவ சமய குரவர் 3).() திருவைந்தெழுத்து 4). தலை, கைகளிரண்டுசெவிகளிரண்டு, மோவாய், புயங்களிரண்டு என்னும்  எட்டவயமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல். 5). தலை, கைகளிரண்டு, முழந்தா ளிரண்டு என்னும் ஐந்தவயவமும்            நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

19.   தொடர்புபடுத்துக:
1).  நம்பியாண்டார் நம்பி 2). இராசராசசோழன் 3. ஆண்டாள்
 4). பட்டினத்தார் 5). அபிராமிபட்டர்

20.   சரியான விடையின் கீழ்க் கோடிடுக.
1) நாகபூசணி              2) பிள்ளையார்         3) 12ம் திருமுறை                
4) பன்னிரண்டு  5) திருவாசகம்










Keine Kommentare: